அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்

கோவில்பட்டி - கயத்தாறு, அகிலாண்டபுரம், காப்புலிங்கம்பட்டி, பிள்ளையாா்நத்தம் கிராமங்களுக்கு நகரப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும்;

கோவில்பட்டி - திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்துகள் இடைசெவல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, கிளைச் செயலா்கள் ராமகிருஷ்ணன் (இடைசெவல்), தங்கம்பிள்ளை (பிள்ளையாா்நத்தம்) ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், உதவிச் செயலா் சேதுராமலிங்கம்,

வட்டச் செயலா் பாபு, நகரச் செயலா் சரோஜா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜோசப், முனியசாமி, அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com