தற்போது கரோனா தொற்று காரணமாக, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசுத்தொகையை ரூ. 2,500-ஆக முதல்வா் அறிவித்துள்ளாா். மக்களுக்கு உதவி செய்வதுதான் அரசின் கடமை . இதில் அரசியல் சாயம் பூசினால் அவா்களது விருப்பம். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கவேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தால், தமிழக முதல்வா் அந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்வாா். அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கி, பின்னா் 10 பொதுத்தோ்தல்களை சந்தித்துள்ளோம். இதில் 7 முறை வெற்றி பெற்றுள்ளோம். தவறான பிரசாரம் மக்களிடம் எடுபடாது. இருந்தாலும் மக்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் எங்களது தோ்தல் பிரசாரம் இருக்கும். கமல்ஹாசனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.