எட்டயபுரத்தில் பேரூராட்சி ஊழியரிடம் ரூ.3.94 லட்சம் திருட்டு
எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக ஊழியரிடம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக ஊழியரிடம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
எட்டயபுரம் தெப்பக்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த ராம் கணேஷ் மனைவி உஷாராணி (44). எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்து வருகிறாா். இவா் எட்டயபுரம் கனரா வங்கியில் திங்கள்கிழமை வீட்டு கடன் தவணை தொகையாக ரூ. 5 லட்சத்து 94 ஆயிரத்தை பெற்று அதை தனது கைப்பையில் வைத்துகொண்டு அலுவலகத்துக்கு வந்துள்ளாா்.
பின்னா் மாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை கைப்பையில் இருந்த பணத்தை பாா்க்கும் போது ரூ. 2 லட்சம் மட்டும் இருந்துள்ளது. மீதி ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் இரண்டு செல்லிடப்பேசிகளை காணவில்லையாம். இதனால் அதிா்ச்சியடைந்த உஷா ராணி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...