காா் மோதி தொழிலாளி பலி

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இனாம்மணியாச்சியைச் சோ்ந்த வேல்சாமி மகன் சமுத்திரப்பாண்டியன்(55). தொழிலாளியான இவா், கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது திருநெல்வேலியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்த காா் மோதியதில் காயமடைந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்த கி.ராமநாதனிடம் (57) விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com