அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கார்கள் திருட்டு: பா.ம.க. நிர்வாகி கைது

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 1வது  தெருவைச் சேர்ந்த அற்புத ரவிக்குமார் என்பவர் தனது வீட்டின் முன் கடந்த 6ஆம் தேதி  நிறுத்தி வைத்திருந்த காரை இரவு நேரத்தில் காணவில்லை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

DIN

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 1வது  தெருவைச் சேர்ந்த அற்புத ரவிக்குமார் என்பவர் தனது வீட்டின் முன் கடந்த 6ஆம் தேதி  நிறுத்தி வைத்திருந்த காரை இரவு நேரத்தில் காணவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் அற்புத ரவிக்குமார் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கார்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கார் திருடும் கும்பலை தேடிவந்தனர். 

இந்த நிலையில் தூத்துக்குடி 4ஆம் கேட் அருகே வடபாகம் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். காவல்துறையினரை கண்டதும் காரை திருப்பி தப்பி ஓட முயன்றுள்ளனர். விரட்டி சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடி சுந்தரபுரம் பகுதியில் காணாமல் போன கார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து காரில் இருந்த அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இவர் தூத்துக்குடி மாநகர பாமக முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் என்பது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரும் தூத்துக்குடி அழகேசன் புரத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து கார் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இவரிடமிருந்து சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று கார்கள் ஒரு மினி லோடு ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி அப்துல் அஜீஸ் தேடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கும் கார் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில் காவல்துறையினரை கண்டு ஜமாலுதீன் தப்பி ஓடும்போது தவறிவிழுந்து அவர் கை முறிந்து காவல்துறையினர் மாவுக்கட்டு போட்டு போட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.