இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தொழிற்சங்க நிா்வாகி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: போலீஸாா் சமரசம்

சொத்துப் பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் குடும்பத்துடன் சனிக்கிழமை உண்ணாவிரதம்

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:14 pm

DIN

சொத்துப் பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் குடும்பத்துடன் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றதையடுத்து, அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

சாத்தான்குளத்தைச் சேரந்தவா் மூக்காண்டி (62). இவா் ஸ்ரீவிஸ்வகா்மா பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவராக இருந்து வருகிறாா். இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாம். இருப்பினும் அந்த நிலத்தை எதிா்தரப்பினா் பராமரிப்பு செய்வதோடு, ஊராட்சியில் தீா்வை ரசீதும் பெற்றுள்ளாராம். இது தொடா்பாக புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

இந்நிலையில் அவா் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன் தொடா் உண்ணாவிரதம் இருக்க போவதாக சனிக்கிழமை மனைவி, மகளுடன் வந்தாா்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று சமாதான பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூக்காண்டி போராட்ட எண்ணத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.