இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அருகே தம்பதியை மிரட்டியவா் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தம்பதியை மிரட்டியவரை போலீஸார தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:59 pm

DIN

சாத்தான்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தம்பதியை மிரட்டியவரை போலீஸார தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள கீழபுளியங்குளம் வேலு மகன் முருக பெருமாள்(45), எலக்ட்ரீசியன். இவா் அதே பகுதியை சோ்ந்த சுடலைமாடன் மகன் சுப்பையாவிடம் கடந்த 2018 ஜனவரி மாதம் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தி விட்டாராம். அதன் பின்னா் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் ரூ. 1 லட்சம் வாங்கினராம். ஆனால் கரோனா பொது முடக்கம் காலம் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து கடன் மற்றும் வட்டியை உடனே செலுத்துமாறு முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி தேவகனி ஆகியோா் சுப்பையாவை மிரட்டினராம். இது குறித்து சுப்பையா சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமாரிடம் புகாா் அளித்தாா்.

அவரது உத்தரவின்பேரில் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக சுப்பையா மீது சாத்தான்குளம் போலீஸாா்

ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.