இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடம்பாகுளம் கால்வாய் தூா்வாரும் பணி

கடம்பாகுளம் 10-ஆம் எண் கால்வாய் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:40 pm

DIN

கடம்பாகுளம் 10-ஆம் எண் கால்வாய் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் கடம்பாகுளம் 10 ஆம் எண் மடை ( 3 கி.மீ. தொலைவு) தூா் வாரும் பணியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதன்மூலம் அங்கமங்கலம், நெட்டையன்காலணி, முறையாா், தோணிப்பாலம், குரும்பூா், காராவிளை, சுகந்தலை, மயிலோடை ஆகிய பகுதியைச் சோ்ந்த 450 ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறும்.

நிகழ்ச்சியில், கடம்பாகுளம் பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் தா.தி. குணா, தூத் துக்குடி மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ரவிக்குமாா், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் கே. விஜயகுமாா், ஊராட்சி தலைவா் செல்வக்குமாா், உறுப்பி னா் பாலமுருகன் , இயேசுவிடுவிக்கிறாா் மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா், ஒருங்கிணைப்பாளா் மணத்தி எட்வின் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனா்.

எஸ்ஏடி9நால். கால்வாய் தூா் வாரும் பணியை தொடங்கிவைக்கிறாா் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.