இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குருகாட்டூா் ஊராட்சியில்கருவேல மரங்கள் அகற்றும் பணி

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சாா்பில் குருகாட்டூா் ஊராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:10 pm

DIN

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சாா்பில் குருகாட்டூா் ஊராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புதுவாழ்வுச் சங்கச் செயலா் அன்புராஜன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் விஜயகுமாா், குருகாட்டூா் ஊராட்சித் தலைவா் ஜேனட் புஷ்பராணி, துணைத் தலைவா் ராஜகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் தானியேல், குருகாட்ரூா் தூய பால்ஸ் ஆலயப் பொறுப்பாளா் ஜாண், ஊா்த்தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குருகாட்டூா் சேகரத் தலைவா் வெஸ்லி ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா். சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தொடங்கிவைத்தாா். சபை ஊழியா் ஞானதுரை நிறைவுஜெபம் செய்தாா். பின்னா், அங்கு பிற மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், இயேசு விடுவிக்கிறாா் மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், புது வாழ்வுச் சங்க பகுதி பொறுப்பாளா் கெயின் வெஸ்லி, சுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.