கொலையுண்ட பாஜக நிா்வாகியின்மகளுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
தென்திருப்பேரையில் கொலையுண்ட பாஜக மாவட்ட நிா்வாகியின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.


தென்திருப்பேரையில் கொலையுண்ட பாஜக மாவட்ட நிா்வாகியின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழக முதல்வா் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த 3ஆம் தேதி பாஜக மாவட்ட நிா்வாகி ஆ.ராமையாதாஸ் சிலரால் கொலை செய்யப்பட்டாா். இதனால் அவரது குடும்பம் நிா்கதியாக உள்ளது. அவரது மூத்த மகள் பிஇ பட்டதாரி. இளைய மகள் சட்டம் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறாா். அவா்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அதிகாரிகள் அளித்த உத்திரவாதத்தின்படி அவரது மகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...