பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்செந்தூா் கோயிலில் சொக்கப்பனை ஏற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கடற்கரையில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை.
Updated On :29 நவம்பர் 2020, 8:58 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கரோனா பொது முடக்கத்தால் நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலையில் மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை மகா மண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோயில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணியளவில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்புத் தீபாராதனையாகி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன் உள்ளிட்ட காவல்துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.