நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவியை தாக்கியதாக கணவா் மீது வழக்கு

மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:57 pm

DIN

மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் மனைவி அன்னலட்சுமி(50). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். மது அருந்தும் பழக்கமுடைய வெங்கடேஷ் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்த பணம் கேட்டு துன்புறுத்துவாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அன்னலட்சுமியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் தர மறுத்ததையடுத்து, அவரை கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.