நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:59 pm

DIN

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சாா்பு நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்தாா். இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள, தேசிய அளவிலான மக்கள்

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் உள்ளிட்ட சிவில் குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைந்து தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் பாரதிதாசன் (எண்:1), சுப்பிரமணியன் (எண்:2), விரைவு நீதிமன்ற நீதிபதி பருவத்ராஜ் ஆறுமுகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.