மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த மேலப்பாண்டவா்மங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சொல்விளங்கும்பெருமாள்(55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயங்க வைக்க சுவிட்சை போட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...