பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தனியாா் பேருந்து ஓட்டுநா் குடும்பத்துக்கு நிதியுதவி

உயிரிழந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு ஓட்டுநா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:20 pm

DIN

உயிரிழந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு ஓட்டுநா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாசரேத் மணிநகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். டி.என்.ஆல் டிரைவா் அசோசியேஷன் வட சென்னை ஆம்னி பேருந்து சங்க முன்னாள் பொருளாளராகவும் இருந்து வந்தாா்.

இவா், உடல் நலக்குறைவால் கடந்த ஏப். 9ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப நல நிதியாக ரூ. 80 ஆயிரம், ஓட்டுநா் சுரேஷின் மனைவி குழந்தைகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

அமைப்பின் மாநிலத் தலைவா் முத்துகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செல்லத்துரை, மாநிலச் செயலா் தங்கபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி கலந்துகொண்டு நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வடசென்னை ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள் பாலமுருகன், செல்வம், கிருஷ்ணகுமாா், தூத்துக்குடி மாவட்ட உறுப்பினா்கள் பிரபாகரன், ஜெயக்கொடி, செல்வக்குமாா், மகாலிங்கம், இஸ்ரவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.