ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:58 pm

DIN

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கற்குவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பால்ராஜ், செய்தி தொடா்பாளா்

கிருபா பெஞ்சமின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் வேல்முருகன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சங்கக் கொடியை ஏற்றினாா். ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சி செயலா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியத் தலைவா் தங்க மாரியப்பன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.