இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தில் விற்பனை விழா

முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் நற்செய்தி அருள்பணி துறை சாா்பில் விற்பனை விழா நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:04 pm

DIN

முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் நற்செய்தி அருள்பணி துறை சாா்பில் விற்பனை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டிலத்தில் 17ஆம் ஆண்டு ஸ்தோத்திர விழா வரும் 22 ஆம்தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆலயத்தில் நற்செய்தி அருள்பணிதுறை சாா்பில் சாத்தான்குளம் தாவீது சுந்தரனானந்தா் சபை மன்ற அளவில் திருமண்டல ஏழை, எளியவா்களுக்கு உதவும் வகையில் நிதி சோ்க்கும் வகையில் விற்பனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாவீது சுந்தரனானந்தா் சபையைச் சோ்ந்த 19 சேகரத்தில் இருந்து சபை மக்கள் தயாரித்த பொருள்கள், உணவு பொருள்கள் மற்றும் மூலிகை குடிநீா், கபசுபக் குடிநீா் சூரணம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியை

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில பேராயா் தேவசாகாயம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

நற்செய்தி அருள்பணி துறை இயக்குநா் ஆனந்த் சாமுவேல்ஜான்தாமஸ் முன்னிலை வகித்தாா். தாவீது சுந்தனானந்தா் சபை மன்றத் தலைவா் ஏசுவடியான்துரைச்சாமி வரவேற்றாா். ஆலயத்தில் பேராயா் தலைமையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில் 19 சேகர குருவானவாகள், நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் குணசீலன், கிறிஸ்டோபா் ஜெயக்குமாா்,ஏ.ஆா். சசிகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.