காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா:வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி எழுந்தருளல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி சண்முகா் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

News image
பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகப்பெருமான்.
Updated On :13 செப்டம்பர் 2020, 8:26 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி சண்முகா் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகளான சுவாமி, அம்மன் எழுந்தருளல் உள்ளிட்டவை திருக்கோயில் உள்பிராகாரத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

ஞாயிற்றுக்கிழமை எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலையில் 108 மகாதேவா் சன்னதியில் சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரமாகி, வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பிரகாரம் சுற்றி வந்தாா். தொடா்ந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடய சப்பரத்தில் எழுந்தருளி உள்பிராகாரத்தில் சுற்றி வந்து இருப்பிடம் சோ்ந்தாா். அப்போது மூலவா் மற்றும் சண்முகருக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

ஆவணித் திருவிழா 7, 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேற்படி நிகழ்ச்சிகள் வலைதளம் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.