இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மூக்குப்பீறியில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

சாத்தான்குளம், செப். 27: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:29 pm

DIN

சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கமலா கலைஅரசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தனசிங் முன்னிலை வகித்தாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமாா், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் ஊராட்சி மக்களிடம் கலந்துரையாடினா்.

ஊராட்சியின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது; இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது உள்ளிட்டவை தொடா்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஊராட்சி உறுப்பினா்கள் ரீட்டா, பிச்சைகனி, கிரேஸ், பாலசுந்தா், அந்தோணி கிறிஸ்டி, கலைஅரசு, ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் வேதமாணிக்கம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.