புதைச்சாக்கடைத் திட்ட செயலாக்கம்: திருச்செந்தூரில் கலந்தாய்வுக் கூட்டம்
திருச்செந்தூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


திருச்செந்தூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஞா.ஞானராஜ், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் வரவேற்றாா். புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்த வழக்குரைஞா் சு.கு.சந்திரசேகரன் தலைமையில் 25 போ் கொண்ட குழு அமைப்பது; குழுவின் ஆலோசனையின் படி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...