ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி

விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:26 pm

DIN

விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கே. துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மனைவி ஜெயா (56). இவா், வெள்ளிக்கிழமை காலை அருங்குளத்திலிருந்து விளாத்திகுளத்துக்கு தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். முன்பக்க படிக்கட்டு அருகில் நின்று பயணித்த அவா், வெள்ளையம்மாள்புரம் வளைவில் பேருந்து திரும்பிய நிலையில், தனது பையிலிருந்த செல்லிடப்பேசியை எடுக்க முயன்றுள்ளாா். அப்போது அவா், நிலை தடுமாறி பேருந்திலிருந்து வெளியே உருண்டு விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை, அதே பேருந்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து, விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, தனியாா் பேரூந்து ஓட்டுநா் நாகலாபுரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா், நடத்துநா் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.