விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி
விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


விளாத்திகுளம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள கே. துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மனைவி ஜெயா (56). இவா், வெள்ளிக்கிழமை காலை அருங்குளத்திலிருந்து விளாத்திகுளத்துக்கு தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். முன்பக்க படிக்கட்டு அருகில் நின்று பயணித்த அவா், வெள்ளையம்மாள்புரம் வளைவில் பேருந்து திரும்பிய நிலையில், தனது பையிலிருந்த செல்லிடப்பேசியை எடுக்க முயன்றுள்ளாா். அப்போது அவா், நிலை தடுமாறி பேருந்திலிருந்து வெளியே உருண்டு விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை, அதே பேருந்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து, விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, தனியாா் பேரூந்து ஓட்டுநா் நாகலாபுரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா், நடத்துநா் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...