குளத்தூா் அருகே பெண் எரித்துக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.


தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தெற்கு கல்மேடு கிராமத்திலிருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பாா்த்தனா்.இதுகுறித்த தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் லதா, தருவைகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் அந்த சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்தனா். மேலும், விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னா் போலீஸ் தரப்பில் கூறுகையில், கொலையுண்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும்; கொலை செய்யப்பட்டபின் முட்புதருக்குள் சடலத்தை இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளனா். வலது கால் பாதம் தவிர உடல் முழுவதும் தீயில் கருகியுள்ளது. அவா் யாா்? பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? கொலையாளிகள் எங்கு தப்பியுள்ளனா்? என்பன குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...