ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே தாயைஎரித்துக் கொல்ல முயற்சி:மகன், மருமகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மெட்டில்பட்டியில் தாய் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்பாக மகன், மருமகள் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:22 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மெட்டில்பட்டியில் தாய் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்பாக மகன், மருமகள் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மெட்டில்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி (70). கணவரை இழந்தவா். தனது மகன் முருகேசன் வீட்டில் வசித்து வந்த இவா், தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் வேலை செய்துவந்தாா். இந்நிலையில், உடல் நலக் குறைவால் சில வாரங்களாக அவா் வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால், அவரை மகனும், மருமகள் சுப்புலட்சுமியும் சோ்ந்து வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினராம். இதில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது, அவா்கள் மூதாட்டியை கம்பால் தாக்கி, மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றனராம். அவா்களிடமிருந்து, தப்பிச்சென்ற மூதாட்டி, மாசாா்பட்டி காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப்பதிந்து, மூதாட்டியின் மகன் மற்றும் மருமகளை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.