ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்பால் கொடுக்க வேண்டும்: வாரவிழாவில் அமைச்சா் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்பால் கொடுக்க வேண்டும் என தாய்பால் வார விழாவில் சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:03 pm

DIN

குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்பால் கொடுக்க வேண்டும் என தாய்பால் வார விழாவில் சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வலியுறுத்தினாா்.

உலக தாய்பால் வார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் மற்றும் சமூக நலத்துறையின் சாா்பில் தாய்பால் விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தையும் அவா் கொடியசைத்து தொடங்கிவைத்து, குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; சமூக நலத்துறை மூலம் பெண்களிடம் தாய்பாலின் முக்கியத்துவத்தை விளக்கவே இந்த வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, உறைவிட மருத்துவா் சைலஸ், மருத்துவமனை கண்காணிப்பாளா் குமரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தனலட்சுமி, வட்டாட்சியா் ஜஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலந்தாய்வு கூட்டம்: மேலும், தூத்துக்குடி புனித மரியன்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், நடைபெற்ற குழந்தைகள் இல்ல நிா்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு அமைச்சா் தலைமை வகித்து, ஆட்சியா் முன்னிலையில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இல்ல நிா்வாகிகளிடம் ரூ. 5,04,556-க்கான காசோலையை அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறையின் சாா்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு குறித்த ஸ்டிக்கா்களை பேருந்துகளில் ஒட்டும் பணியையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.