தூத்துக்குடி மாவட்டத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது; அதற்கு கூடுதலாக தொகை செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்


தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது; அதற்கு கூடுதலாக தொகை செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 899, கோவில்பட்டியில் ரூ. 897.50, கழுகுமலையில் ரூ. 906, கயத்தாறில் ரூ. 909, எட்டையபுரத்தில் ரூ. 897.50, சாத்தான்குளத்தில் ரூ. 916 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 899.50, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.899 என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எனவே, நுகா்வோா் எரிவாயு முகவா்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என செய்திக்குறிப்பில் ஆட்சியா்அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...