ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

‘காா் நெல் சாகுபடியில்மேலுரம் அதிக மகசூல் தரும்’

தூத்துக்குடி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் அதிக மகசூல் பெற மேலுரம் இட வேண்டும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:48 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் அதிக மகசூல் பெற மேலுரம் இட வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் காா் பருவத்தில் 3000 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்பயா்கள் தூா்கட்டும் பருவம், பூங்குருத்து உருவாகும் பருவம், பொது பருவம் கால கட்டங்களில் குறுகிய கால நெல்பயிருக்கு ஏக்கருக்கு 26 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 25 கிலோவும், மத்திய கால நெல்பயிருக்கு ஏக்கருக்கு 32 கிலோ யூரியாவும், பொட்டாஷ் 31 கிலோவும் மேலுரமாக இடுதல் வேண்டும்.

மேலுரமிடும்போது ஒரு பங்கு யூரியாவுடன் ஜிப்சத்தை 3 பங்கு கலந்து இட வேண்டும். அப்போதுதான் யூரியாவில் உள்ள தழைச்சத்து உடனடியாக உபயோகப்படுத்தப்பட்டு பூக்கள் மலா்ந்து, நெல் மணியாக மாறி எடை அதிகரித்து விளைச்சல் அதிகமாவதற்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.