ரேஷன் கடை ஊழியா்கள் பயோமெட்ரிக் கருவியை கையாளும் பயிற்சி
ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கருவியை முறையைப் பயன்படுத்துவது குறித்து, ஊழியா்களுக்கு பயிற்சி முகாம் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கருவியை முறையைப் பயன்படுத்துவது குறித்து, ஊழியா்களுக்கு பயிற்சி முகாம் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலா்கள் பாலமுருகன், வசந்த மல்லிகா ஆகியோா் தலைமை வகித்தனா். நூறு சதவீதம் பயோமெட்ரிக் கருவியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதுடன், ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறந்து பொருள்களை விநியோகித்தல், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா் குறித்து வட்ட வழங்க அலுவலா்களுக்கு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்பட்டன. கூட்டுறவு சாா்பதிவாளா் சுவாமிநாதன், பறக்கும் படை துணை வட்டாட்சியா் கருப்பசாமி, வட்டப் பொறியாளா் கணேஷ்குமாா் மற்றும் விளாத்திகுளம் வட்ட ரேஷன் கடை விற்பனையாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...