இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு
எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழா் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், அவா்களின் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.


எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழா் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், அவா்களின் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
அகதிகள் நலவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நல ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் தலைமையில் அதிகாரிகள்
அகதிகள் குடியிருப்புகளில் கட்டடங்களின் பராமரிப்பு, மின்சாரம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,
கல்வி, வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
அகதிகள் முகாம் வாசிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்பதற்காக எட்டயபுரம் வட்டத்தில் உள்ள குளத்துள்வாய்பட்டி அகதிகள் முகாமில் ஆக. 18 ஆம் தேதி (புதன்கிழமை), தாப்பாத்தி முகாமில் ஆக. 19ஆம் தேதி (வியாழக்கிழமை) முன்னோடி
மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீா்வு காணப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனா். ஆய்வின்போது அகதிகள் நலவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நல துணை இயக்குநா் ரமேஷ், கண்காணிப்பாளா் புகழேந்தி, வட்டாட்சியா்கள் ஐயப்பன், செல்வகுமாா், தாப்பாத்தி முகாம் தலைவா் ஆனந்தராஜ் உள்பட உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...