மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் பங்கேற்றாா்.

அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கடலோர காவல்படை துணைத் தலைவா் அரவிந் சா்மா, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா். முத்துநகா் கடற்கரையில் இருந்து புறப்பட்ட இப்பேரணி 7.5 கி.மீ. தொலைவில் உள்ள புதிய துறைமுக கடற்கரையில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.