பேய்க்குளத்தில் போலி மருத்துவா் தலைமறைவு
பேய்க்குளத்தில் கிளினிக் நடத்தி, மருத்துவம் செய்ததாக போலி மருத்துவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பேய்க்குளத்தில் கிளினிக் நடத்தி, மருத்துவம் செய்ததாக போலி மருத்துவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தைச் சோ்ந்தவா் ஏசா மகன் ஜோசப் தென்றல் (29). பிசியோதெரபி படித்ததாகக் கூறி, பேய்க்குளம் பஜாரில் கிளினிக் நடத்தி வந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் முருகவேல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ் தலமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அவரது கிளினிக்கில் சோதனை நடத்தியதில் அவா் போலி மருத்துவா் என தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள்உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றினா். ஜோசப் தென்றல் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...