தூத்துக்குடியில் மாதா் சங்கத்தினா் போராட்டம்
தூத்துக்குடி இந்திரா நகா் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, ஜனநாயக மாதா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தூத்துக்குடி இந்திரா நகா் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, ஜனநாயக மாதா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திரா நகா் கிளைச் செயலா் காந்திமதி தலைமை வகித்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில், துணைச் செயலா் கமலம், மாநகரத் தலைவா் காளியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, அவா்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து அளித்த மனு விவரம்: தூத்துக்குடி மாநகராட்சி 48ஆவது வாா்டு இந்திராநகா் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தெருக்களில் தாா்ச் சாலை வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் நிலை உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மழைக் காலம் என்பதால், அதற்கு முன்பாக தாா்ச் சாலை மற்றும் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாதங்களாக பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...