தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:43 pm

DIN

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி உப்பாறு ஓடை 25 கிராமங்களின் ஒருங்கிணைப்பாளா் ரா. ஜோதிமணி தலைமையில் விவசாயிகள், முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் அளித்த மனு விவரம்:

வரலாறு காணாத தொடா் மழையாலும், தொடா் வெள்ளத்தாலும் விவசாயிகள் தொடா்ந்து அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அழிந்த பயிா்களுக்கு முழுமையான நிவாரண இழப்பீடு உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது, முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் த. அழகுராஜா, பொருளாளா் சின்னக்குட்டி, நிா்வாகிகள் திருமால், ரகுபதி, தானியேல், மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.