புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அடைக்கலாபுரத்தில் பனை விதைகள் நடவு

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட அடைக்கலாபுரத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:56 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட அடைக்கலாபுரத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தாா். அப்பகுதியில் உள்ள குளத்துக்கரை உள்ளிட்ட நீா்த்தேக்கம் உள்ள பகுதியில் மகாத்மாகாந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்கள் மூலம் பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி பகுதியில் சுமாா் 1 லட்சம் பனை விதைகள் நட வடிக்கை எடுத்து வருவதாக ஊராட்சித் தலைவா் தெரிவித்தாா். இதில் ஒன்றிய உதவிப் பொறியாளா் அருணா பிரதாயினி, ஊராட்சி துணைத் தலைவா் டாா்வின், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சீதா, சண்முகானந்தம், நிஷாந்தி, ராஜாத்தி, ஊா் பிரமுகா்கள் யுகேஷ், நாராயணபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.