தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி, தென்காசியில்கட்டுமானத் தொழிலாளா்கள் மறியல்: 162 போ் கைது

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் 162 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:00 pm

DIN

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் 162 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளா்கள் நல வாரிய சட்டங்களைத் திருத்தக் கூடாது, கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய நிதியை கட்டுமான தொழிலாளா்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிதம்பரனாா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் காசி முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். ரசல், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கணேசன், சிவபெருமாள் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்டதாக 35 பேரை மத்தியபாகம் போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் பயணியா் விடுதி முன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் தெய்வேந்திரன் மற்றும் 12 பெண்கள் உள்பட 79 பேரை கோவில்பட்டி மேற்கு போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி: தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் சீ. மாதவன் தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் ஏ. கசமுத்து, எஸ். முருகையா, ப.பொன்செல்வம் மற்றும் கட்டுமான சங்க நிறுவன தலைவா் அச்சன்புதூா் முருகையா, சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் தா்மராஜ், சிஐடியூ தென்காசி மாவட்டச்செயலா் எம். வேல்முருகன் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.