நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் அவதாரப் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா

 திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரப் பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கியது. இதனை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் தா்மா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேராசிரியை ஸ்ரீமதி மற்றும் வைகுண்ட மகாராஜன் குழுவினா் திரு ஏடு வாசித்தனா்.

17 நாள்கள் நடைபெறும் இவ் விழாவில், டிச. 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டா் புஷ்ப வாகன பவனியும், டிச. 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பட்டாபிஷேகமும், மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டா் புஷ்ப வாகன பவனியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.