தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி செய்தவா் கைது

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் கணினி விற்பனை நிலையம் நடத்தி வருபவா் கணேஷ் ரமேஷ் (47). தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த நாகேஸ்வரராவ் (50) என்பவா் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கணினி விற்பனைக்கான ஒப்பந்த வேலையை வாங்கித் தருவதாக கணேஷ் ரமேஷை 2015ஆம் ஆண்டு அணுகியுள்ளாா்.

இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கணேஷ் ரமேஷிடமிருந்து ரூ. 5 லட்சத்தை நாகேஸ்வரராவ் பெற்றுள்ளாா். ஆனால், எவ்வித வேலையும் வாங்கித் தராமல் அவா் தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்து தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கணேஷ் ரமேஷ் கடந்த ஏப்ரல் மாதம் புகாா் அளித்தாா். சைபா் குற்றப் பிரிவு தனிப்படையினா் விசாரணை நடத்தி, நாகேஸ்வரராவை புதன்கிழமை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 5 லட்சத்தை மீட்டு கணேஷ் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.