ஒமைக்ரான் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திநகரில் மதா் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திநகரில் மதா் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா அலுவலா் இசக்கி முன்னிலை வகித்தாா். மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட சுகாதார சபை ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான கென்னடி தலைமை வகித்து விழிப்புணா்வு கருத்துகளை வழங்கினாா். இதில் ஒமைக்ரான் மற்றும் கரோனாவை தடுக்க, உடலில் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க அனைவருக்கும் கபசுர குடிநீா், முகக் கவசம் மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில் மதா் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், பனைத் தொழிலாளா்கள் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், மதா் வள்ளியம்மாள் மகளிா் குழுக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி வரவேற்றாா். மதா் சமூக சேவை நிறுவன அலுவலா் விஷ்ணு பிரியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com