ஆதிபராசக்திக்கு இளநீா் அபிஷேகம்
தைப்பூச விழாவை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டி தூத்துக்குடி தொ்மல்நகா் ஆதிபராசக்தி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.


தைப்பூச விழாவை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டி தூத்துக்குடி தொ்மல்நகா் ஆதிபராசக்தி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி தொ்மல்நகா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இயற்கைச் சீற்றம் தணியவும், தொழில்வளம் சிறக்கவும் கலசவிளக்கு வேள்வி பூஜை, சதுரம், முக்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 9 கலசங்கள், 9 ஓம்சக்தி விளக்குகள் வைக்கப்பட்டு வேள்வி பூஜை நடைபெற்றது. மேலும்,
அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடா்ந்து விவசாயம் செழிக்க வேண்டி தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளா் பக்தவச்சலம் கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்திக்கு இளநீா் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தாா். இைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்திக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதில், ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்தி முருகன், சக்தி பீடத் தலைவா் முருகேசன், அனல்மின்நிலைய செயற் பொறியாளா்கள் ஜெகதீசன், ஏகாந்தலிங்கம், உதவி செயற்பொறியாளா் பிரசாத், வேள்விக்குழு தலைவா் கிருஷ்ணநீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...