ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசூா் ஊராட்சியில் தேசிய குடும்ப நலகணக்கெடுப்பு தொடக்கம்

சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:10 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட அதிசயபுரத்தில், கணக்கெடுப்புப் பணியை ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தொடங்கிவைத்தாா்.

இதில், சுரேஷ் தலைமையிலான களப்பணியாளா்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் குடும்ப நலன்கள் குறித்த விவரங்கள், தேவையான தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, வீட்டில் கழிப்பறை உள்ளிட்ட விவரங்களை கேட்டு பதிவு செய்தனா்.

இதில், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். அரசூா், முதலூா், சாத்தான்குளத்தில் தலா 3 நாள்கள் இக்கணக்கெடுப்பு நடத்தி, ஆய்வு முடிவை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க உள்ளதாக கணக்கெடுப்பு குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.