நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:49 pm

DIN

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

என்எல்சி நிறுவனத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலை கிடைக்காத வகையில் வழிவகை செய்யும் பொறியாளா் தோ்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கு தமிழா்களையே தோ்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கட்சியின் வணிகா் அணி மாவட்ட அமைப்பாளா் சுலைமான், தொகுதிச் செயலா் ராமச்சந்திரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் முத்தலிப் உள்பட பலா் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.