சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செல்வமகள் திட்டம்: 500 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்த செலவில் சேமிப்பு கணக்குகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:43 pm

DIN

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்த செலவில் சேமிப்பு கணக்குகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்தச் செலவில் தலா ரூ. 250 வீதம், ரூ.1.25 லட்சம் செலுத்திருந்தாா். அதனையடுத்து அக்குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கி, அதற்கான கணக்கு புத்தகத்தை பெற்றோரிடம் திங்கள்கிழமை வழங்கும் விழா தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சா் தலைமை வகித்து, செல்வமகள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை பெற்றோரிடம் வழங்கினாா். இதில், கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சந்திரசேகா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளா் வேலுமணி மற்றும் அஞ்சலக ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் வசந்தாசிந்துதேவி வரவேற்றாா். பரமேஸ்வரன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 3 ஆவது வாா்டு பசும்பொன் நகா், கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட கே.நாச்சியாா்பட்டி, சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் ஆகிய பகுதியில், அம்மா நகரும் நியாய விலைக்கடையை அமைச்சா் திறந்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 196 விவசாயிகளின் பயிா் கடன் ரூ.1.12 கோடி தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான கடன் தள்ளுபடி சான்றிதழை பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.