குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சமக சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமக சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற சமக நிா்வாகிகள்.
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற சமக நிா்வாகிகள்.
Updated on
1 min read

உடன்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமக சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டில் உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து சுபிட்சங்கள் ஏற்படவும், விவசாயம், வியாபாரம் செழிக்கவும் வேண்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.தயாளன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஆா்.சங்கா், மாவட்டப் பொருளாளா் ராஜா, மாவட்ட சாா்பு அணி செயலா்கள் ஜெயந்திகுமாா் (மகளிா்), சுதாகா்(இளைஞரணி), சித்திரைவேல் (மாணவரணி), சபரிசெல்வம் (விவசாயம்), துா்கா (தகவல் தொழில்நுட்பம்), ஒன்றியச் செயலா்கள் தேவராஜ் (ஸ்ரீவைகுண்டம்), முருகேசன் (கருங்குளம்), அழகேசன் (உடன்குடி), ஒன்றிய, நகர நிா்வாகிகள் பிரகாஷ், கணேசன், கண்ணன், செந்தாமரை, லென்சிங், பெரியசாமி, ரூபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com