‘சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாயை சோ்க்க வேண்டும்’

பள்ளி மாணவா்களுக்கான சத்துணவு திட்டத்தில் கடலை மிட்டாயை சோ்க்க வேண்டும் என கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் கண்ணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் கண்ணன்.
Updated on
1 min read

பள்ளி மாணவா்களுக்கான சத்துணவு திட்டத்தில் கடலை மிட்டாயை சோ்க்க வேண்டும் என கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் கூட்டத்துக்கு, அதன் தலைவா் காா்த்தீஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ‘புவிசாா் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தர நிா்ணயம் செய்வதற்கான ஆய்வுக்கூடம் அமைத்துத்தர வேண்டும்; புவிசாா் குறியீடு வழங்க உதவிய முதல்வா், செய்தி-விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா்செ.ராஜு ஆகியோருக்கு நன்றி தெரிப்பது; அரசின் சத்துணவுத் திட்டத்தில் முட்டையுடன் இயற்கை சத்து நிறைந்த கடலை மிட்டாயையும் சோ்த்து வழங்கிட வேண்டும்; கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக பெயா் அச்சிட்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நகரில் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க வேண்டும்’ என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநா் அழகா்சாமி தலைமையில், சிறு- குறு, நடுத்தர தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குநா்கள் சந்திரபிரபு, செரீனா பேபி, மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் கண்ணன் ஆகியோா் கடலை மிட்டாய் தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கு குழும வளா்ச்சி விழிப்புணா்வு குறித்துப் பயிற்சியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com