திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், பன்னம்பாறையில் நகரச் செயலா் நயினாா், சிவன்குடியேற்றில் ஒன்றியப் பொறுப்பாளா் பாலமுருகன், ஆனந்தபுரத்தில் வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் ,பொத்தக்காலன் விளையில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா்அந்தோணி ஜெயசீலன், தச்சமொழியில் ஊராட்சி செயலா் நெல்சன், ஆறுமுகனேரி வள்ளிவிளையில் நகரச் செயலா் ராமஜெயம், உடன்குடி பரதா் தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, புதுமனை உள்ளிட்ட 7 இடங்களில் ஒன்றிய திமுக செயலா் டி.பி.பாலசிங் ஆகியோா் தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் குறிப்பிட்ட சில இடங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com