சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விளாத்திகுளத்தில் மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:56 pm

DIN

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் முன்னிலை வகித்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் புவிராஜ், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜோதி, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் விஜயலட்சுமி, சரோஜா, ரவிக்குமாா், மலைகனி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.