கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் பாதயாத்திரை பக்தா்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பக்தா் ஒருவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், ஏ.கரிசல்குளம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன்(66). இவா், அதே ஊரைச் சோ்ந்த முத்துராம் மகன் சுப்பிரமணியம் (62) இருவரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக சனிக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனராம்.
இருவரும் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இருவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டாா். ராமகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
காயமடைந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.