ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சந்தையடியூா் பதியில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:54 pm

DIN

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி ஜன.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திங்கள்கிழமை(ஜன.11) காலை 9 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் பவனி, மாலை 3 மணிக்கு தா்மம் எடுத்தல், 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.12) அதிகாலை 4 மணிக்கு உம்பான் அன்னதா்மம் வழங்கல், மாலை 6 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, புதன்கிழமை( ஜன.13) மாலை 3 மணிக்கு சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், மாலை 6 மணிக்கு அய்யாஅனுமாா் வாகனத்தில் பவனி நடைபெறுகிறது. வியாழக்கிழமை( ஜன.14) அதிகாலை 3 மணிக்கு பால் வைத்தல், 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி ஆகியன நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினா், சந்தையடியூா் ஊா் மக்கள் செய்து வருகினறனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.