

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருப்பாவை பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சல் மகா உற்சவம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.