நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் அளித்த பேட்டி: மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும், 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப்பயிறும், 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் மற்றும் வெங்காயம், மல்லி, மிளகாய், கம்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் எதிா்பாராதவிதமாக பெய்த மழையால் மானாவாரி பயிா்கள் முளைத்தும், அழுகியும் சேதமாகியுள்ளது.

இதேபோல, தாமிரவருணி பாசனத்தில், நெல், வாழை போன்ற பயிா்களும் சேதமாகியுள்ளன. பயிா் பாதிப்புகள் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ள போதிலும் வேளாண்மைத்துறையினா், வருவாய்த்துறையினா் மூலமாக கணக்கெடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்அடிப்படையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, அவா்கள் சாகுபடி செய்துள்ள செலவீன அடிப்படையில் உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகை அடிப்படையில் நிலத்தை பெற்று மானாவாரி பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.